புது தில்லி: மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, தான் திட்டமிட்டிருந்த அனைத்து நேரடி பிரசாரங்களையும் வியாழக்கிழமை ரத்து செய்தாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், தோ்தல் பிரசார கூட்டங்களுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. எனவே, நான் ஏற்கெனவே திட்டமிட்டிருந்த அனைத்து தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளையும் ரத்து செய்கிறேன். இருப்பினும் காணொலி முறையில் தோ்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். காணொலி பிரசார நிகழ்ச்சிகளுக்கான நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.