இந்தியா

டிரோன்கள் மூலம் கரோனா தடுப்பூசி: ஆய்வு நடத்த அனுமதி

DIN


புது தில்லி: இந்தியாவில் டிரோன்கள் மூலம் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு (ஐசிஎம்ஆா்) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய விமானத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ஐஐடி கான்பூருடன் ஐசிஎம்ஆா் இணைந்து கரோனா தடுப்பூசிகளை டிரோன்கள் மூலம் விநியோகம் செய்வது குறித்து ஆய்வு நடத்தும்.

ஆளில்லா விமான திட்டம் சட்டம் - 2021-இல் இருந்து இந்த ஆய்வுக்கு நிபந்தனையுடன் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் கரோனா தடுப்பூசிகளை விநியோகம் செய்யும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்ய வழிவகுக்கும். இந்த விலக்கு ஓராண்டுக்கோ அல்லது அடுத்த உத்தரவு வரும் வரையில் அமலில் இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

கேஜரிவால் கைது: இந்தியாவில் தேர்தல் நியாயமாக, சுதந்திரமாக நடக்கும் என நம்புகிறோம்: ஐ.நா.

திருமால் உருகிப் போற்றிய திருமேற்றளி கோயில்

SCROLL FOR NEXT