இந்தியா

ஜார்க்கண்டில் ஒரு வார பொதுமுடக்கம் இன்று முதல் தொடக்கம்

ANI

இந்தியாவில் கரோனா இரண்டாவது அலைக்கு மத்தியில் ஜார்க்கண்டில் இன்று முதல் ஒரு வார பொதுமுடக்கம் தொடங்கியுள்ளது. 

மாநிலத்தில் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் ஸ்வஸ்த்ய சூரக்ஷா சபதம் அதாவது சுகாதார பாதுகாப்பு வாரத்தை கடைப்பிடிக்கக் கோரி அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த செவ்வாயன்று அறிவித்தார். 

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று முதல் ஏப்.29 வரை ஒரு வார பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அத்தியாவசிய பொருள்கள், வேளாண்மை, கட்டுமானம், சுரங்க மற்றும் தொழில்துறை ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது. 

மாநில அரசின் உத்தரவுப்படி, அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து கடைகளும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பக்தர்கள் ஒன்றுகூடாமல் வழிபாட்டுத் தலங்களில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் புதன்கிழமை நிலவரப்படி புதிதாக 5,041 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் 62 பேர் இறந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

SCROLL FOR NEXT