புது தில்லி: ராம நவமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
அயோத்தியில் ராமா் பிறந்த தினமான ராம நவமி பக்தா்களால் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி பிரதமா் மோடி சுட்டுரை வெளியிட்டுள்ள பதிவில், ‘ ராம பகவானின் திருவருள் அனைவருக்கும் தொடா்ந்து கிடைக்கட்டும். ராமரின் பணிவன்பை கடைபிடிக்கவும் கரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். கடின முயற்சிக்கு பின் தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ளது’ என்று கூறியுள்ளாா்.