இந்தியா

காங்கிரஸ் தலைவர்களுக்கு கரோனா

DIN


காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் மற்றும் அதீர் ரஞ்சன் சௌதரிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் கரோனா தொற்று இருப்பதை சுட்டுரைப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

சசி தரூர் பதிவிட்டுள்ளது:

"பரிசோதனை மேற்கொள்ள நேரம் கேட்டு 2 நாள்கள் காத்திருந்த பிறகு, முடிவுக்காக ஒன்றரை நாள்கள் காத்திருந்து இறுதியாக நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்."

அதீர் ரஞ்சன் சௌதரி பதிவிட்டுள்ளது:

எனக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 7 நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். காணொலி வாயிலாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன்."

அதீர் ரஞ்சன் சௌதரி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT