காங்கிரஸ் தலைவர்கள் சசி தரூர் மற்றும் அதீர் ரஞ்சன் சௌதரிக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருவரும் கரோனா தொற்று இருப்பதை சுட்டுரைப் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.
சசி தரூர் பதிவிட்டுள்ளது:
"பரிசோதனை மேற்கொள்ள நேரம் கேட்டு 2 நாள்கள் காத்திருந்த பிறகு, முடிவுக்காக ஒன்றரை நாள்கள் காத்திருந்து இறுதியாக நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை நேர்மறையான மனநிலையுடன் எதிர்கொள்ள விரும்புகிறேன்."
அதீர் ரஞ்சன் சௌதரி பதிவிட்டுள்ளது:
எனக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 7 நாள்களில் என்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் கரோனா நெறிமுறைகளுக்குள்பட்டு தனிமைப்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். காணொலி வாயிலாக தொடர்ந்து பிரசாரம் மேற்கொள்வேன்."
அதீர் ரஞ்சன் சௌதரி மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.