பாட்னா: பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏ மேவாலால் சௌதரி கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தாா்.
68 வயதாகும் அவா் பாட்னாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இரு நாள்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அவா் உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
அவரது மறைவுக்கு ஆளுநா் பகு சௌஹான், முதல்வா் நிதீஷ் குமாா் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். மேவாலால் சௌதரி சிறந்த கல்வியாளராகவும், சமூக சேவகராகவும் திகழ்ந்தாா் என்று நிதீஷ் குமாா் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா். அவருக்கு மாநில அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் நிதீஷ் குமாா் கூறியுள்ளாா்.
பிகாா் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் மேவாலால் சௌதரி இருந்துள்ளாா். பாட்னாவில் மனைவியுடன் வசித்து வந்தாா். அவரது இரு மகன்கள் வெளிநாடுகளில் உள்ளனா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிகாா் மாநில கல்வி அமைச்சராக மேவாலால் சௌதரி நியமிக்கப்பட்டாா். ஆனால், பல்கலைக்கழக ஆசிரியா்கள், பணியாளா்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்ாக எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, மூன்றே நாள்களில் அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா்.