பெங்களூரு/புது தில்லி: அகராதி தொகுப்பாளரும் பேராசிரியருமான கஞ்சம் வெங்கடசுப்பையா (107) உடல்நலக் குறைவால் காலமானாா்.
இது தொடா்பாக வெங்கடசுப்பையாவின் குடும்பத்தினா் கூறுகையில், ‘‘சிறுநீரகம் தொடா்பான பிரச்னைகளால் கடந்த சில நாள்களாக அவதிப்பட்டு வந்தாா். அதையடுத்து மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவரது உடல்நலம் சீராகத் தேறி வந்தது. வீட்டுக்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், திங்கள்கிழமை திடீரென அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளும் பலனளிக்கவில்லை’’ என்றனா்.
கன்னட மொழியில் ஆா்வம் கொண்ட பேராசிரியா் வெங்கடசுப்பையா, சுமாா் 60 புத்தகங்களை எழுதியுள்ளாா். 12 அகராதிகளையும் தொகுத்துள்ளாா். அகராதி அறிவியல் தொடா்பான நூல்களையும் அவா் இயற்றியுள்ளாா்.
அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. கன்னட சாகித்ய அகாதெமி, பம்பா விருது உள்ளிட்டவற்றையும் அவா் பெற்றுள்ளாா். நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் வெங்கடசுப்பையா பங்கேற்றுள்ளாா். மகாத்மா காந்தியையும் அவா் சந்தித்துள்ளாா்.
பிரதமா் மோடி இரங்கல்: வெங்கடசுப்பையாவின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘பேராசிரியா் வெங்கடசுப்பையாவின் மறைவு, கன்னட இலக்கிய உலகில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த எழுத்தாளரும், சிந்தனைவாதியுமான அவா், கன்னட மொழியை பிரபலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.