கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் விரைவில் குணமடைய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் திங்கள்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டாா்.
லேசான காய்ச்சல் இருந்ததையடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் கரோனா தொற்று உறுதியானதையடுத்து அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங் விரைவில் குணமடைய திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார். அவர் தனது கடிதத்தில், நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். உங்களை எனது நண்பனாக எண்ணுகிறேன். உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நாட்டையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தும் நிலையில் தொற்று பாதிப்பிலிருந்து மிள்வது குறித்து நம்பிக்கை கொள்வதாக தெரிவித்துள்ளார்.