கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இதில், கரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி, இருப்பு அளவு, பயன்படுத்தப்படும் அளவு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு மாலை 4 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார்.