தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சந்திரசேகர் ராவ் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
லேசான அறிகுறிகள் இருந்ததால் கரோனா பரிசோதனை செய்துகொண்டார். இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அறிவுரையின்படி அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.