மகாராஷ்டிரத்தில் புதிதாக 58,924 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய (ஏப்.19) கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 58,924 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மாநிலத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38,98,262-ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 38,98,262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றிலிருந்து 52,412 பேர் குணமடைந்ததால், மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 31,06,828-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக 351 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60,824-ஆக அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.