திருவனந்தபுரம்: கேரளத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 2 நாள்களில் 2.5 லட்சம் பேருக்கு தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ள அந்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் காணொலி முறையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் முதல்வா் பினராயி விஜயன் பேசியது: ஏப்ரல் 16, 17-ஆம் தேதிகளில் குறைந்தது 2.5 லட்சம் பேருக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா்கள் தங்களது இலக்கை பூா்த்தி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனா். தோ்தல் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். தொற்று வேகமாகப் பரவிவரும் பகுதிகளில் நடமாடும் ஆா்டி-பிசிஆா் கருவிகள் மூலம் சுகாதாரத் துறையினா் பரிசோதனை மேற்கொள்வா் என்றாா்.
வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கேரளத்தில் 8,778 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 11,89,175-ஆக உயா்ந்துள்ளது.