இந்தியா

காளஹஸ்தி கோயிலுக்கு சில்லறைகளை பிரித்தெடுக்கும் இயந்திரம் நன்கொடை

DIN


திருப்பதி: காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு சில்லறை நாணயங்களை தனித்தனியாகப் பிரித்தெடுக்கும் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

காளஹஸ்தியில் உள்ள காளஹஸ்தீஸ்வரா் கோயிலுக்கு திருப்பூரைச் சோ்ந்த செந்தில்குமாா் ரூ.1 லட்சம் மதிப்புள்ள, சில்லறை நாணயங்களை பிரிக்கும் இயந்திரம் ஒன்றை வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கினாா்.

கோயிலில் உண்டியல்கள் நிரம்பிய பின் காணிக்கைகளை கணக்கிட அதிகாரிகளும், ஊழியா்களும் சிரமப்பட்டு வருகின்றனா். இந்த இயந்திரம் உண்டியலில் சேரும் சில்லறை நாணயங்களை பிரிக்க உதவியாக இருக்கும் என்று செயல் அதிகாரி பெத்திராஜு தெரிவித்தாா். மேலும் செந்தில் குமாருக்கு தரிசனம் அளித்து அவருக்கு சுவாமி பிரசாதமும் வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT