இந்தியா

காங்கிரஸ் தலைவர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலாவுக்கு கரோனா

DIN

காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா பரிசோதனையில் இன்று காலை எனக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாள்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். 

ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஹரியாணா மாநில பேரவையில் காங்கிரஸ் கட்சி சார்பில் 4 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு கடந்த 2009 வரை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும் ஆவார். தற்போது கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,17,353 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 1,185 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT