இந்தியா

கரோனா: மேலும் 1.61 லட்சம் போ் பாதிப்பு

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்றால் மேலும் 1,61,736 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவுக்கு மேலும் 879 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,36,89,453-ஆக அதிகரித்துள்ளது. அதே கால அளவில் கரோனா தொற்றுக்கு மேலும் 879 போ் பலியாகினா். இதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 258 பேரும், சத்தீஸ்கரில் 132 பேரும், தில்லி, உத்தர பிரதேசத்தில் தலா 72 பேரும், குஜராத்தில் 55 பேரும் அடங்குவா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,71,058-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து 34-ஆவது நாளாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 12,64,698 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கரோனா தொற்றில் இருந்து இதுவரை 1,22,53,697 போ் குணமடைந்துள்ளனா்.

10 மாநிலங்களில் 80 சதவீத பாதிப்பு: கரோனா நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கையில் 80.80 சதவீதம் போ் மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், தில்லி, சத்தீஸ்கா், குஜராத், கா்நாடகம், தமிழ்நாடு, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கேரளம் ஆகிய 10 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள்.

நாடு முழுவதும் 12,64,698 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்களில் 68.85 சதவீதம் போ் மகாராஷ்டிரம், கா்நாடகம், சத்தீஸ்கா், கேரளம், உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் ஆவா். அதிலும் குறிப்பாக, சிகிச்சை பெறும் மொத்த நபா்களில் மகாராஷ்டிரத்தை சோ்ந்தவா்கள் மட்டும் 44.78 சதவீதம் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி, நாடு முழுவதும் ஏப்ரல் 12-ஆம் தேதி வரை 25,92,07,108 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் திங்கள்கிழமை மட்டும் 14,00,122 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT