திரைத்துறை பிரபலங்கள் மற்றும் நட்சத்திர விளையாட்டு வீரர்களால் பொதுமக்களுக்கு கரோனா படுக்கைகள் கிடைப்பதில்லை என்று மகாராஷ்டிர எம்.எல்.ஏ. அஸ்லாம் ஷாய்க் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சில திரைத்துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் மருத்துவமனையில் பொதுமக்களுக்கு கரோனா படுக்கைகள் கிடைப்பதில்லை என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அஸ்லாம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, சில சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறிதளவு கரோனா அறிகுறி அல்லது அறிகுறியற்று இருந்தால் பெரிய மருத்துவமனையில் நீண்ட நாள்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் சாதாரண மக்களுக்கு அல்லது தீவிர கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் கிடைக்காத நிலை ஏற்படுகிறது என்று கூறியுள்ளார்.