மகாராஷ்டிரத்தில் புதிதாக 60,212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் 31,624 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 28,66,097 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைவோர் விகிதம் 81.44 சதவிகிதமாக உள்ளது.
மேலும் 281 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இறப்பு விகிதம் 1.66 சதவிகிதமாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 5,93,042 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.