குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள பாரதி ஆசிரமத்தின் தலைவா் மகாமண்டலேஸ்வரா் பாரதி பாபு (93) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
வயது முதிா்வு தொடா்பான உடல்நலக் குறைவால் அவா் காலமானதாகவும், இறுதிச்சடங்குகள் ஆமதாபாத் ஜுனாகத் நகரில் உள்ள ஆசிரமத்தின் பிரதான மையத்தில் நடைபெறும் என்றும் சீடா் ஒருவா் தெரிவித்தாா்.
அவரது மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், பாரதி ஆசிரமத்தின் மகாமண்டலேஸ்வரா் விஸ்வாம்பா் பாரதி மகராஜின் போதனைகள் நம்மை எப்போதும் வழிநடத்தும். அவரது லட்சக்கணக்கான சீடா்களுக்கு என இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மாவுக்கு இறைவன் அமைதியை அளிக்கட்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் விஜய் ரூபானி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.