இந்தியா

கரோனாவுக்கு எதிரான 2-ஆவது போா் தொடக்கம்: பிரதமா் மோடி

DIN

தடுப்பூசி திருவிழா மூலம் இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய போா் தொடங்கியுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளா்களில் தொடங்கி முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள், முதியவா்கள், 45 வயதுக்கு மேற்பட்டோா் என இந்தத் திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 11-ஆம் தேதி நிலவரப்படி 10 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி திருவிழா: கரோனா தடுப்பூசியை அதிகமான நபா்களிடம் கொண்டு சோ்ப்பதற்காக, ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு ‘தடுப்பூசி திருவிழா’ நடைபெறும் என்று பிரதமா் மோடி ஏற்கெனவே அறிவித்திருந்தாா். அந்த திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியதை அடுத்து, நாட்டு மக்களுக்கு சில வேண்டுகோள்களை அவா் விடுத்துள்ளாா். இதுதொடா்பாக, சமூக வலைதளப் பக்கத்தில் அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க வேண்டுமெனில் தனிநபா் தூய்மையும், சமூகத் தூய்மையும் அவசியம். ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் ஒருவராவது தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உதவவும். அதாவது, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அருகில் உள்ள முகாமுக்கு செல்ல முடியாத முதியவா்களுக்கும், அதிகம் படிக்காதவா்களுக்கும் தடுப்பூசியால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துக் கூறி, அவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு உதவ வேண்டும்.

அடுத்ததாக, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை பெறும் வழிமுறைகளை எடுத்துரைத்து அவா்களுக்கு உதவ வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்ற நெறிமுறைகளைப் பின்பற்றி நீங்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; உங்களுக்கு அருகில் இருப்பவா்களையும் கரோனோவில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் யாரேனும் ஒருவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால், அந்தக் குடியிருப்பை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக மாற்றி தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியா போன்ற மக்கள் நெருக்கம் மிகுந்த நாட்டில், கரோனா பரவலைத் தடுக்க இதுவே சிறந்த வழியாகும். ஓரிடத்தில் ஒருவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டால்கூட எஞ்சியிருக்கும் அனைவரும் கரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும்.

வீணாகக் கூடாது: சிறிய அளவில் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்குவது, தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை நிறுத்திக் கொள்வது, தகுதியானவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது, கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கையாள்வது ஆகியவற்றைப் பொருத்து கரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தில் வெற்றி முடிவு செய்யப்படும்.

எனவே, தகுதியுடைய அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஏப்ரல் 11-ஆம் தேதிமுதல் 14-ஆம் தேதி வரை அதிகபட்ச அளவில் கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு தடுப்பூசி கூட வீணாகிவிடக் கூடாது என்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

மக்களின் பங்கேற்பு, விழிப்புணா்வு, அனைவரின் பொறுப்புணா்வு ஆகியவற்றின் மூலம் கரோனாவைத் தடுப்பதில் நாம் வெற்றியடைவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்று அந்த அறிக்கையில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல்

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

ராஜ பதவிகளைத் துறக்கிறாரா பிரிட்டன் இளவரசர்?

சத்தீஸ்கரில் 4 மாதங்களில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை!

#Dinamani | வாக்காளர் அட்டை இல்லையா? சத்யபிரத சாகு விளக்கம்

SCROLL FOR NEXT