கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாநில ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
காணொலி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், கரோனா பரவல் விகிதம் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.