தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு நாளை பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார்(80). இவருக்கு பித்தப்பையில் நாளை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதற்காக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த மாத இறுதியில் சரத் பவாருக்கு பித்தப்பையில் ஏற்கெனவே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.