மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் இன்று கரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் தேவையான தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்நிலையில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 14 வரை நான்கு நாள்களுக்கு தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
அதன்படி இன்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங், இம்பால் ஜவஹர்லால் நேரு மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் இன்று கரோனா தடுப்பூசி முதல் டோஸை செலுத்திக்கொண்டார்.