கர்நாடகத்தில் புதிதாக 10,250 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,65,290 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2,638 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 9,83,157 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 12,889 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 69,225 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 440 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
அங்கு 10-ம் தேதி மட்டும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7.72 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 0.39 சதவிகிதம்.