கேரளத்தில் இன்று மேலும் 6,194 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 61,957 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் புதிதாக 6,194 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு இன்று மேலும் 17 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,767ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 2,584 பேர் குணமடைந்தனர். இதுவரை 11,15,342 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 39,778 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். 1,58,988 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 382 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.