கர்நாடகத்தில் புதிதாக 6,955 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதில் பெங்களூருவில் மட்டும் 4,384 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 10,55,040 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 3,350 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 9,80,519 பேர் குணமடைந்துள்ளனர். 12,849 பேர் பலியாகியுள்ளனர்.
இன்றைய தேதியில் 61,653 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.