இந்தியா

பிகார் மாநிலத் தேர்தல்: பாஜக பொறுப்பாளராக தேவேந்திர பட்னாவிஸ் நியமனம்

DIN

நடைபெற உள்ள பிகார் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை நியமித்து அக்கட்சியின் மத்திய தலைமை அறிவிப்பி வெளியிட்டுள்ளது.

243 உறுப்பினர்களைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 29 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பிகார் சட்டப்பேரவைக்கு அக்டோபர் 28ல் தொடங்கும் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

இந்நிலையில் பிகார் மாநில தேர்தல் பொறுப்பாளராக மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் தலைமை புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

"நாங்கள் பிகாரில் முழு வீச்சுடன் போட்டியிடுவோம். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்.” என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அருகே பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி வேட்பாளா் மீது தாக்குதல்

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

SCROLL FOR NEXT