இந்தியா

குடியாத்தம், திருவொற்றியூரில் இடைத்தேர்தல் இல்லை: ஆணையம்

DIN

தமிழகத்தில் காலியாகவுள்ள குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

அதேபோன்று, கேரளம், அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தற்போது இடைத்தேர்தல் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தல் நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக மேற்குறிப்பிட்ட 4 மாநில தலைமைச் செயலாளர்களும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியதை அடுத்து, தேர்தல் ஆணையம் இந்த முடிவினை வெளியிட்டுள்ளது. 

மேலும், காலியாக உள்ள பிற மக்களவை, சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அந்தந்த மாநில சூழ்நிலைகளைப் பொருத்து தேர்தல் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தைப் பொருத்தவரை குடியாத்தம், திருவொற்றியூர் சட்டப்பேரவைத் தொகுதிகளின் காலம் 24.05.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2021 ஏப்ரல் - மே மாதத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால் மேற்குறிப்பிட்ட இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT