குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவாகியுள்ளது.
செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.49 மணியளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ராஜ்கோட் மாவட்டத்தில் ஏற்பட்டதாக நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை எந்தவிதமான சேதமும், பாதிப்புகளும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.