இந்தியா

இதுவரை 77,000 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தொற்று பாதிப்பு

DIN


இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவத் தொடங்கியது முதல் இதுவரை சுமார் 77 ஆயிரம் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு 60 லட்சத்தை எட்டியிருக்கும் நிலையில், இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

கரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களுடன் இணைந்து பணியாற்றி வரும் பாதுகாப்புப் படை வீரர்கள் 76,768 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், பிஎஸ்எஃப், என்எஸ்ஜி உள்ளிட்ட படைகளைச் சேர்ந்த 76,768 பேருக்கு இதுவரை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 401 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் கரோனா தொற்று பாதிப்பைப் போலவே மகாராஷ்டிரம் முதல் இடத்தில் உள்ளது. இங்கு 129 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். காவலர்கள் உள்பட 12,760 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 77 ஆயிரம் பேரில், துணை ராணுவப் படையைச் சேர்ந்த 15,318 பேரும் மத்திய ரிசவ் காவல் படையைச் சேர்ந்த 5,427 பேரும் அடங்குவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT