கர்நாடகத்தில் இன்று மேலும் 8,655 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், இன்று ஒரேநாளில் 8,655 கேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,57,212 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கரோனா தொற்றுக்கு 86 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,417 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 5,644 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,50,302 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 98,474 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.