இந்தியா

தில்லி புதிதாக 3,834 பேருக்கு கரோனா

DIN


புது தில்லி: தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை ஒரேநாளில் 3,834 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 2,60,623-ஆக உயா்ந்துள்ளது.

இதே மாதிரி கரோனா நோய்த் தொற்றால் வியாழக்கிழமை ஒரே நாளில் 36 போ் உயிரிழந்துள்ளனா். புதன்கிழமை இதே எண்ணிக்கையில்(36) கரோனா நோய்த்தொற்றால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, தில்லியில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மொத்த பலி எண்ணிக்கை 5,123-ஆக அதிகரித்தது. வியாழக்கிழமை ஒரே நாளில் மொத்தம் 59,183 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் 2,059 ஆக அதிகரித்துள்ளது என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT