இந்தியா

தொடர் மழையால் தில்லியில் அதிகரிக்கும் காய்கறி விலை

DIN

கரோனா பெருந்தொற்றுக்கிடையே வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், தில்லியில் காய்கறி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே ஊரடங்கு தளர்வில் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிப்பு, தொடர் கனமழை மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறையால் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தில்லியில் காய்கறி விலை முன்பு இருந்ததை விட 50 முதல் 60 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ தக்காளி விலை 80 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு கிலோவுக்கு 40 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று கொத்தமல்லி, பூண்டு, மிளகாய் விலையும் கடுமையாக உயர்ந்ந்துள்ளது. காய்கறி விலை உயர்வால் விற்பனையும் கடுமையாக சரிந்துள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் நிலையில், காய்கறி விலை உயர்வால் அதனை வாங்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

SCROLL FOR NEXT