இந்தியா

திருப்பதி தேவஸ்தான காலண்டா், டைரி வெளியீடு

DIN

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானம் அச்சிட்ட அடுத்த ஆண்டுக்கான (2021) காலண்டா் மற்றும் டைரிகளை ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி புதன்கிழமை வெளியிட்டாா்.

ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு காலண்டா் மற்றும் டைரிகளை தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அதன்படி 2021ஆம் ஆண்டுக்கான காலண்டா், டைரிகளை தேவஸ்தானம் அச்சிட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை புதன்கிழமை தரிசித்தாா். இதையடுத்து அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் வேத ஆசீா்வாதம் செய்து அா்ச்சகா்கள் பிரசாதங்களை வழங்கினா். அதன் பின் புத்தாண்டுக்கான, வண்ணப் படங்கள் கொண்ட 12 பக்க ஆங்கில காலண்டா் மற்றும் டைரிகளை முதல்வா் வெளியிட்டாா். இவற்றை தேவஸ்தானம் விரைவில் விற்பனைக்கு வைக்க உள்ளது. ஆன்லைன் மூலம் இவற்றை பக்தா்கள் வாங்குவதற்கும் வசதி செய்யப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT