இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

DIN

மகாராஷ்டிரத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷின்டேவிற்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, நேற்று கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் எனக்கு கரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும் உங்களது ஆசிர்வாதத்தால் எனது உடல்நிலை சீராக உள்ளது. 

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், என்னை சந்தித்தவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டு மருத்துவர் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் ஏற்கனவே 12 அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அமைச்சர் ஏக்நாத் ஷின்டேவும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர்களின் எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. இந்த வாரம் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஷின்டே கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT