சண்டிகர்: பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் 13 கிலோ ஹெராயின் போதைப்பொருளை எல்லைப் பாதுகாப்புப்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக வியாழனன்று எல்லைப் பாதுகாப்புப்படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘விழிப்புடன் செயல்பட்டு வரும் நமது படையினர் எல்லைக்கு மறுபகுதியில் இருந்து நடைபெறும் போதைமருந்து கடத்தல் சம்பவங்களைத் தொடர்ந்து தடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் நடைபெற்ற ஒரு தேடுதல் வேட்டையின்போது பெரோஸ்பூர் மாவட்டத்தில், 116-ஆவது பட்டாலியன் பிரிவினைச் சேர்ந்த வீரர்கள் 13 கிலோ ஹெராயின் நிரப்பப்பட்ட நான்கு பிளாஸ்டிக் டப்பாக்களை கண்டெடுத்தனர். அந்த ஹெராயினின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.65 கோடியாகும்’ தெரிவித்துள்ளனர்.