இந்தியா

கடந்த 5 நாள்களாக தொற்று பாதிப்பை விட குணமடைவோர் அதிகம்

DIN


புது தில்லி: தீவிர கரோனா பரிசோதனை மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால், நாட்டில் கரோனா தொற்றிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கடந்த 5 நாட்களாக, நாட்டில் தினந்தோறும் குணமடைபவர்களின் எண்ணிக்கை, புதிய நோயாளிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89,746 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் 83,347 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்துடன் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45,87,613- ஆக உள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று 81.25%-ஆக உள்ளது. உலகளவில் இந்தியாவில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக அதாவது, உலகளவில் குணமடைபவர்களில் இந்தியாவின் பங்கு 19.5% ஆக உள்ளது.

நாட்டிலேயே, 17 மாநிலங்களில் புதிய நோயாளிகளை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. குணமடைந்தவர்களில் 75% பேர் மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரம், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு, ஒடிசா, தில்லி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மகாராஷ்டிரத்தில் புதிதாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர், ஆந்திராவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

SCROLL FOR NEXT