இந்தியா

நீர்வளத்துறை அமைச்சருடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு

DIN

போலவரம் அணைத் திட்டம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்தார்.

ராயல சீமா பகுதியில் தண்ணீர் தட்டுப்பாட்டை முழுமையாக போக்கும் வகையில் போலவரம் திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்த உள்ளது.

இதனிடையே இந்த திட்டத்திற்காக மத்திய அரசிடம் ஆந்திர அரசு நிதியுதவியினை கோரியுள்ளது.

இதற்கு நிதியுதவி அளிக்க முயற்சிகள் எடுக்கப்பட்ம் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில நிதியமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி நிதியளவு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பதிலளிக்கப்பட்டது.

இதனிடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை ஆந்திர முதல்வர் நேரில் சந்தித்து பேசினார். இதில் போலவரம் திட்டத்திற்காக விரைந்து நிதிஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து தஞ்சை வந்த மென்பொறியாளர்

102 மக்களவை தொகுதிகளில் இன்று பதிவான வாக்குப்பதிவு விவரம்

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

SCROLL FOR NEXT