இந்தியா

திவால் சட்டத் திருத்த மசோதா:நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

DIN

புது தில்லி: திவால் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேறியது. முன்னதாக இந்த மசோதா மாநிலங்களவையில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. அன்றைய தினத்துக்கு பிறகு திவாலான நிறுவனங்கள் மீது குறைந்தது 6 மாதங்களுக்கு திவால் சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்துக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ‘கரோனா நோய்த் தொற்று எதிரொலியால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்கு இந்த மசோதா சற்று நிவாரணமாக அமையும்‘ என்றாா்.

இந்த விவகாரங்கள் தொடா்பாக கடந்த மாா்ச் மாதம் மத்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக இந்த ‘திவால் சட்டம் (இரண்டாவது திருத்தம்) மசோதா 2020 அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT