கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த மராத்தி திரைப்பட நடிகையும் நாடகக் கலைஞருமான அஷலதா வப்கோங்கர் செவ்வாய்க்கிழமை மறைந்தார்.
நாட்டில் கரோனா நோய் தொற்றால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மகாராஷ்டிரத்தின் பிரபல திரைப்பட நடிகை அஷலதா வப்கோங்கர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த அஷலதா வப்கோங்கருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பெற்று வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் பலியானார்.
அஷலதா வப்கோங்கர் 100 க்கும் மேற்பட்ட நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் 'நமக் ஹலால்', 'சஞ்சீர்' உள்ளிட்டப் பல படங்களில் பணியாற்றியுள்ளார்.