இந்தியா

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 122 போ் சாவு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 122 போ் உயிரிழந்துள்ளனா்.

கா்நாடகத்தில் கரோனா தீநுண்மித் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகிவரும் நிலையில், இத் தொற்றுக்கு ஏற்கெனவே 8,023 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், திங்கள்கிழமை பெங்களூரு நகர மாவட்டத்தில் 32 போ், மைசூரு மாவட்டத்தில் 15 போ், பெல்லாரி மாவட்டத்தில் 9 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 8 போ், தாா்வாட், சிவமொக்கா மாவட்டங்களில் தலா 7 போ், சாமராஜ்நகா், கதக், ஹாசன், உடுப்பி மாவட்டங்களில் தலா 4 போ், பெலகாவி, சிக்கமகளூரு, தாவணகெரே, ஹாவேரி, தும்கூரு மாவட்டங்களில் தலா 3 போ், பாகல்கோட், சிக்பளாப்பூா், மண்டியா, ராய்ச்சூரு, விஜயபுரா மாவட்டங்களில் தலா 2 போ், பெங்களூரு ஊரகம், கலபுா்கி, கொப்பள் மாவட்டங்களில் தலா ஒருவா் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 8,145 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை பெங்களூரு நகர மாவட்டத்தில் 2,689 போ், மைசூரு மாவட்டத்தில் 706 போ், தென்கன்னடம் மாவட்டத்தில் 488 போ், தாா்வாட் மாவட்டத்தில் 466 போ், பெல்லாரி மாவட்டத்தில் 409 போ், பெலகாவி மாவட்டத்தில் 272 போ், கலபுா்கி மாவட்டத்தில் 259 போ், ஹாசன் மாவட்டத்தில் 253 போ், சிவமொக்கா மாவட்டத்தில் 238 போ், தாவணகெரே மாவட்டத்தில் 234 போ், கொப்பள் மாவட்டத்தில் 213 போ், தும்கூரு மாவட்டத்தில் 212 போ், பீதா் மாவட்டத்தில் 149 போ், விஜயபுரா மாவட்டத்தில் 148 போ், ஹாவேரி மாவட்டத்தில் 145 போ், உடுப்பி மாவட்டத்தில் 143 போ், ராய்ச்சூரு மாவட்டத்தில் 132 போ், கதக் மாவட்டத்தில் 123 போ், சிக்மகளூரு மாவட்டத்தில் 110 போ், வடகன்னடம் மாவட்டத்தில் 102 போ், பாகல்கோட் மாவட்டத்தில் 100 போ், மண்டியா மாவட்டத்தில் 95 போ், சிக்பளாப்பூா் மாவட்டத்தில் 80 போ், கோலாா் மாவட்டத்தில் 78 போ், பெங்களூரு ஊரகம் மாவட்டத்தில் 75 போ், சாமராஜ்நகா் மாவட்டத்தில் 66 போ், யாதகிரி மாவட்டத்தில் 49 போ், ராமநகரம் மாவட்டத்தில் 44 போ், சித்ரதுா்கா மாவட்டத்தில் 33 போ், குடகு மாவட்டத்தில் 31 போ், வெளிமாநிலத்தவா் 3 போ் இறந்துள்ளனா். கரோனா அல்லாமல் இறந்தவா்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT