கரோனா நோய்த் தொற்று காலத்தில் மருத்துவப் பணியாளா்கள் அணியும் பாதுகாப்பு உடைகள், கழிவுகள் ஆகியவற்றை பாதுகாப்பாக அப்புறப்படுத்துவது பெரும் சவாலாக உள்ளது என மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் செளபே தெரிவித்தாா்.
மருத்துவ கழிவுகளை அகற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சா் செளபே, ‘கரோனாவால் எத்தனை சுகாதாரப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்ற தகவல் மாநில அரசுகளிடம்தான் உள்ளது. மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு உபகரணங்களான உடைகள், முகக்கவசம், கையுறை உள்ளிட்ட மருத்துவக் கழிவுகளை எப்படி கையாள வேண்டும், அப்புறப்படுத்த வேண்டும் என்ற விதிமுறைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாா்ச் 19-ஆம் தேதி அறிவித்தது. பின்னா் அதில் சில மாற்றம் செய்து ஜூலை 17-இல் அறிவித்தது.
அதன்படி, கரோனா காலத்தில் மருத்துவப் பணியாளா்கள் பயன்படுத்தும் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களை சேமித்து பொதுவான இடத்துக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக அழிக்க வேண்டும். கரோனா அல்லாத இடங்களில் பயன்படுத்தப்படும் முகக்கவசம், கையுறை உள்ளிட்டவற்றை குறைந்தது 72 மணி நேரம் தனியாக வைத்துவிட்டு, அவற்றை தனித்தனியாக வெட்டிவிட்டு குப்பைகளாக அகற்றலாம்’ என்று தெரிவித்தாா்.