இந்தியா

8 எம்.பி.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்

DIN


மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் ஒருவாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மழைக்காலக் கூட்டத்தொடர் முடியும் வரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட 8 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்த இடைநீக்கத்தை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் காலையிலிருந்து அவை நடவடிக்கைகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேரை ஒரு வாரத்துக்குப் பதிலாக மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போட்டியிட வாய்ப்பு கிடைக்காதது வருத்தம்தான்

பெரம்பலூரில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவைத் தொடங்கத் தாமதம்

திருநங்கை வாக்காளா்களுக்கு வரவேற்பு

‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி பெறும் செ.ஜோதிமணி

பாரீஸ் ஒலிம்பிக் தகுதிப்போட்டி: இந்திய மல்யுத்த வீரா்களுக்கு ஏமாற்றம்

SCROLL FOR NEXT