இந்தியா

8 எம்.பி.க்கள் இடைநீக்கம்; நான்காவது முறையாக மாநிலங்களவை ஒத்திவைப்பு

PTI

புது தில்லி: மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நடந்து வரும் அமளியால் இன்று காலையிலிருந்து நான்காவது முறையாக அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தின்போது ஞாயிற்றுக்கிழமை அமளியில் ஈடுபட்ட எட்டு எதிா்க்கட்சி உறுப்பினா்கள், ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெரிக் ஓ பிரையன், சஞ்சய் சிங், ராஜூ சதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நஸீர் ஹுசைன், இளமாறன் கரீம் ஆகியோர் மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்டதற்காக ஒரு வாரத்துக்கு அவை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் மிக மோசமாக நடந்து கொண்ட 8 உறுப்பினர்களையும், அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்குமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வி. முரளீதரன் அனுப்பிய நோட்டீஸ் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 8 பேர் அவை நடவடிக்கையில் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால், காலை 10 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டு, பிறகு 10.36 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 11.07 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. நான்காவது முறையாக 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷுக்கு  எதிா்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக எதிா்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீா்மானத்தையும் வெங்கய்ய நாயுடு நிராகரித்தார்.

முன்னதாக், மாநிலங்களவையில் ஞாயிற்றுக்கிழமை 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்ற நடவடிக்கையை அவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் கையாண்ட விதத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக 12 எதிா்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீா்மான நோட்டீஸ் அளித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

SCROLL FOR NEXT