மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,738 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (திங்கள்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 15,738 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 12,24,380 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 32,007 பேர் குணமடைந்துள்ளனர், 344 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 9,16,348 பேர் குணமடைந்துள்ளனர். 33,015 பேர் பலியாகியுள்ளனர். 2,74,623 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பை:
மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 1,837 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 2,728 பேர் குணமடைந்தனர், 36 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,86,150 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,50,535 பேர் குணமடைந்துள்ளனர், 8,502 பேர் பலியாகியுள்ளனர். 26,735 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.