கட்டாக்: ஓடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கரோனா மருத்துவமனை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஓடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் உள்ள ஜகத்பூர் பகுதியில் சத்குரு கரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் இங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திங்கள் மதியம் இந்த மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுவரை இந்த தீ விபத்தில் யாரும் உயிரிழந்ததாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தீ விபத்துக்கு மின்சாரக் கசிவு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது,