பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி, "கரோனா தொற்றை எதிர்கொள்ளவே பிம்-கேர்ஸ் உருவாக்கப்பட்டது. பிம்-கேர்ஸ் நிதியிலிருந்து மத்திய சுகாதார அமைச்சகத்துக்கும், மாநில அரசுகளுக்கும் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு?" என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், "இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 50,000 வென்டிலேட்டர்களுக்காக பிஎம்-கேர்ஸ் நிதியிலிருந்து எனது அமைச்சகம் ரூ. 893.93 கோடி பெற்றுள்ளது" என்றார்.