மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,598 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம்:
மகாராஷ்டிரத்தில் புதிதாக 20,598 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 12,08,642 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 455 பேர் பலியாகியுள்ளனர், 26,408 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 32,671 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 8,84,341 பேர் குணமடைந்துள்ளனர். 2,91,238 பேர் இன்னும் கரோனாவுக்கான சிக்ச்சையில் உள்ளனர்.
மும்பை:
மும்பையில் புதிதாக 2,236 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 5,038 பேர் குணமடைந்துள்ளனர், 44 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,84,313 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,47,807 பேர் குணமடைந்துள்ளனர், 8,466 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 27,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.