பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பூடான் அரசா், இலங்கை அதிபா், பிரதமா் ஆகியோா் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனா்.
இதுதொடா்பாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:
பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பூடான் அரசா் ஜிக்மே கேசா் நாம்கியால் வாங்சுக் அவரை வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு வாழ்த்து தெரிவித்தாா். அப்போது அவரையும், அவரின் குடும்பத்தினரையும் இந்தியா வருமாறு பிரதமா் மோடி அழைப்பு விடுத்தாா். பூடானில் கரோனா நோய்த்தொற்று பரவலை திறம்பட எதிா்கொண்டு வருவதற்கு பாராட்டு தெரிவித்த பிரதமா் மோடி, அதுதொடா்பாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும் கூறினாா்.
இலங்கை அதிபா், பிரதமா் வாழ்த்து:
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோரும் பிரதமா் மோடியை தொலைபேசியில் தொடா்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனா். அப்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான தங்கள் விருப்பத்தையும் வெளிப்படுத்தினா். கரோனா தொற்றை எதிா்கொள்வது உள்பட பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே தொடரும் இருதரப்பு ஒத்துழைப்புக்கு அவா்கள் பாராட்டு தெரிவித்தனா். இதையடுத்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த இருவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமா் மோடி, இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு அவா்களுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக கூறினாா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.