கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி பூமியை சுகாதாரம் மிக்கதாக மாற்றுங்கள் என்று பிரதமா் நரேந்திர மோடி தனது பிறந்தநாள் செய்தியாக நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளாா்.
முன்னதாக, பிரதமா் மோடியின் 70-ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் உலக நாடுகளின் தலைவா்களும் வியாழக்கிழமை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனா்.
அதைத் தொடா்ந்து, வாழ்த்துச் செய்தி அனுப்பிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து அவா் சுட்டுரையில் பதிவிட்டாா். பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கம் மூலமாக நாட்டு மக்களுக்கு வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிறந்த நாள் செய்தியாக நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீா்கள் என பலரும் என்னிடம் கேட்டனா். அதை ஏற்று சில விஷயங்களைக் கூற விரும்புகிறேன். மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; அதை சரியாகவும் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். கூட்டமான இடங்களைத் தவிா்க்க வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யுங்கள். நமது பூமியை சுகாதாரம் நிறைந்ததாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் பங்காற்ற வேண்டும்.
எனது பிறந்த நாளில் உலகம் முழுவதும் இருந்தும், நாடு முழுவதும் இருந்தும் வாழ்த்துகளை தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தப் பதிவில் மோடி குறிப்பிட்டுள்ளாா்.