கர்நாடக மாநில துணை முதல்வர் டாக்டர்.அஸ்வத்நாராயணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வரான டாக்டர்.அஸ்வத்நாராயணுக்கு சனிக்கிழமை கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள அவர், “கரோனா பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த சில தினங்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.